சென்னை,ஜூன் 23-
திருவொற்றியூரில் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முடி திருத்தம் செய்தனர் விம்கோ அருகே உள்ள இந்த பள்ளியில் சுமார் 1300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
கோடை விடுமுறை முடிந்து கடந்த வாரம் பள்ளி திறக்கப்பட்டது. விடுமுறையின்போது விருப்பப்படி தலைமுடிவைத்திருந்த மாணவர்கள் பலர் அப்படியே பள்ளிக்கு வந்து இருந்தனர். இதனை கவனித்த ஆசிரி யர்கள் மாணவர்களை அழைத்து சரியான முறையில் முடித்திருத்தம் செய்து வரும்படி கூறியிருந்தனர். அதனை செவிசாய்க்காத சுமார் 100 மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் சாய் பாலாஜி முடித்திருத்தும் தொழிலாளர்களை பள்ளி வளாகத்திற்குள் வரவழைத்து முடித்திருத்தம் செய்தார்.