districts

வேலை நிறுத்தம்:  தையல் தொழிலாளர்கள் ஆலோசனை

விழுப்புரம், மார்ச் 17- அகில இந்திய பொது வேலை நிறுத்தப்போராட்டத்தில் மாநிலம் முழுவதும் தையல் தொழிலாளர்களை திரட்டு வது என்று சிஐடியு முடிவு செய்துள்ளது. விழுப்புரம் மாவட்ட தையல் தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வியாழனன்று (மார்ச் 17) விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் எம்.ஐடா ஹெலன் தலைமை தாங்கினார். மாநிலப் பொருளாளர் ஆர்.மாலதி வரவேற்றார். சிஐடியு விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி துவக்க உரையாற்றினார். மார்ச் 28, 29 தேதிகளில் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை யொட்டி அனைத்து தையல் தொழிலாளர்க ளையும், பொது மக்களையும் வணிகர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றினர்.