districts

img

சாலையோர வியாபாரிகளை முழுமையாக கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்க வேண்டும்

சாலையோர வியாபாரிகளை முழுமையாக கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்க வேண்டும், நகர விற்பனை குழுவின் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு மாவட்ட முறை சாரா தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் செங்கல்பட்டு அம்பேத்கர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் க.பகத்சிங் தாஸ், நாராயணன் (மோட்டார் வாகன சங்கம்), யோபுராஜ்(முறைசாரா சங்கம்), செல்வகுமார் (கட்டுமான சங்கம்) உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.