விழுப்புரம், ஏப்.29- விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தலை காரணம் காட்டி நிறுத்தப்பட்டுள்ள 100 நாள் வேலை திட்டத்தை உடனடியாக துவக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைக்கான நல சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். சங்கத்தின் மாவட்ட குழு கூட்டம் திங்களன்று விழுப்புரத்தில் நடைபெற்றது, கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பி.முரு கன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகுத்தார். கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, மாநிலத் துணைத் தலைவர் வி.ராதா கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று பேசி னர். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மாவட்டத் எம்.முத்துவேல், ஜி.ஜெயக் குமார், எம்.யுகந்தி உட்பட மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை முகாமை நடத்தி அடை யாள அட்டை வழங்க வேண்டும், தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 100 நாள் வேலையை உடனடியாக தொடங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் குறைதீர் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் மற்றும் பயனாளி கள் தேர்வு குழுவில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான நல சங்கத்தினருக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புத் தொகை கோரியும், மாற்றுத் திறனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தில் வருவாய் துறை மூலம் ரூ.1500 மாதாந்திர உதவித் தொகை கோரியும், மாற்றுத்திறனாளிகள் ரூ.2000 வழங்க கோரியும் விண்ணப்பித்து 18 மாதங்கள் கடந்தும் உதவித்தொகை வழங்கப்பட வில்லை ஆகவே உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும், 100 நாள் வேலை முழுமையாக வழங்கப்பட வேண்டும், இல்லையேல் இழப்பீடு வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் முகாம்களை விரை வில் நடத்தாவிட்டால் மாற்றுத்திறனாளி களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப் படும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறை வேற்றினர்.