districts

img

பாவக்கல் கருத்தம்பட்டி சாலையை சீரமைக்கக்கோரி கையெழுத்து இயக்கம்

கிருஷ்ணகிரி,பிப்.13- ஊத்தங்கரை வட்டத்திற் குட்பட்ட காட்டேரி ஊராட்சி யில் பாவக்கல் கூட்டு ரோட்டில்  இருந்து மேல் இலக்கம்பட்டி, ஒன்னகரை, ஆலமரத்தூர், வழியாக கருத்தம்பட்டி வரை 5 கிலோ மீட்டர் சாலை சிதில மடைந்து குண்டும் குழியு மாக உள்ளது. இந்த குறுகிய சாலையை பயன்படுத்தும் பாதைசாரிகளும், இரு சக்கர வாகனத்தில் செல்ப வர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.  சாலையை சீர்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும்.   இந்நிலையில் தமிழ் நாடு முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்து சாலையை சீர்படுத்த கோரி கவுன்சிலர் கோவிந்தசாமி தலை மையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க வட்டக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், சுந்தரம், ஆனந்த் பாபு, வரத ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  அப்பகுதி யில் வசிக்கும் இடதுசாரி விவசாயிகள் சங்க தலைவர் மணல் காடு ராமலிங்கம் முதல் கையெழுத்திட்டு இந்த இயக்கத்தை துவக்கி வைத்தார்.