districts

நரிக்குறவர்களின் நிலம் மோசடியாக பத்திரப்பதிவு: ஆட்சியர்அலுவலகம் முற்றுகை

திருவள்ளூர், நவ. 18- நரிக்குறவர்களுக்கு சொந்தமான இடத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்யக்கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு, அல்லி நகர் பகுதி யில் சுமார் 300 க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்க ளுக்கு சுமார் 45 ஏக்கர் நிலத்தை  9 நரிக்குறவர் குடும்பங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டது. தற்போது இந்த நிலத்தை சிலதனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடோடிகளாக பிழைப்பு தேடிச் சென்ற நரிக்குறவர்கள் மீண்டும் ஒரக்காடு, அல்லி நகர் பகுதிக்கு வந்தபோது அதை சிலர் ஆக்கிர மிப்பு செய்து மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர். மேலும் நிலத்திற்கு சொந்தக்காரர்களை உள்ளே அனு மதிக்காமல் விரட்டி அடித்ததாக கூறப்படு கிறது. மேலும் அந்த இடத்தை சுற்றி ஆக்கிர மிப்பாளர்கள் சுற்றுச்சுவர் அமைக்க முயற்சி செய்துள்ளனர். இதை அறிந்த நரிக்குறவர்கள் சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து   நரிக்குறவர் இன மக்கள் நிலத்தை தங்களுக்கு மீட்டுத்தரக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்து,  ஓராண்டுகளுக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் திங்களன்று (நவ. 18), திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை மோசடியாக ஆக்கிரமிப்பு செய்து பத்திரப் பதிவு செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களது நிலத்தை மீட்டுத்தரக் கோரி ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணி யில் இருந்த திருவள்ளூர் டவுன் காவல்   ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் தலை மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மனுவை பெற்று கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.