தாம்பரம் மாநகராட்சி உதவி ஆணையர் ஷா.ஷகிலா - வால்பாறை நகராட்சி ஆணையர் கி.ரகுராமன் தம்பதியின் மகன் எஸ்.ஆர்.ஷமிர் நவீத், எம்.நாகூர் மைதீன் - மொகைதின் பாத்திமா தம்பதியின் மகள் என்.பாஹிமா பேகம் திருமண வரவேற்பு விழா சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஞாயிறன்று (பிப். 16) நடைபெற்றது. சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மூத்த உறுப்பினர்கள் வே.மீனாட்சி சுந்தரம், க.சின்னையா, வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் இரா.முரளி, வீ.பா.கணேசன், சி.சுந்தரராஜ், கே.கிருஷ்ணசாமி, இ.பாக்கியம், என்.தனசேகரன் (தொமுச), அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.பாஸ்கரன், முன்னாள் தலைவர் மு.அன்பரசு, செய்யாறு சேர்மன் மோகனவேல், வால்பாறை சேர்மன் அழகு சுந்தரவல்லி, அரக்கோணம் சேர்மன் பாரி, தாம்பரம் மாநகராட்சி மேயர் க.வசந்தகுமாரி மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், இணை இயக்குநர்கள், பல்வேறு நகராட்சி ஆணையர்கள், நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.