வேலூர், டிச. 29 - வேலூர் காட்பாடி சாலை யில் வேலூர் கோட்டை அஞ்சலகம் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது. அஞ்சலகத்தின் முன்பு பேருந்து நிறுத்தமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் பெய்த மழை யின் காரணமாக கால்வா யில் அடைப்பு ஏற்பட்டதால் வேலூர் மாநகராட்சி ஊழிய ர்கள் அஞ்சலகத்தில் முன்பு ள்ள கற்களை பெயர்த்து கால்வாய் அடைப்பை சரி செய்தனர். ஆனால் மீண்டும் கற்களைப் போட்டு மூடாத காரணத்தால் அங்கு தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் தோன்ற வழி வகுக்கிறது. அஞ்ச லகத்துக்கு வருவோரும், பேருந்துக்காக காத்திருப் போரும் துர்நாற்றம் வீசுவ தாக கூறுகின்றனர். இதுகுறித்து அஞ்சல் துறை மக்கள் தொடர்பு அதிகாரி மாநகராட்சி உதவி ஆணையரிடம் வாட்ஸ் அப் மூலம் புகார் அளித்து பல நாட்களாகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அஞ்சலக ஊழிய ர்கள் பணி செய்வதிலும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதோடு, பேருந்துக்காக காத்திருக் கும் மக்களும் பாதிக்கப்பட்டு ள்ளனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவ டிக்கை எடுத்து கால்வாய் மீது கற்கள் போட்டு மூட வேண்டும் என்று பொதுமக்க ளும் தபால் நிலைய ஊழியர்க ளும் கோரிக்கை விடுத்துள்ள னர்.