சிதம்பரம், செப்.1- சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி யில் கடலூர் மாவட்ட சாரண சாரணியர் ஆளுநர் விருதுக்கான தேர்வு முகாம் 3 நாட்கள் நடைபெற்றது. இந்த முகாமில் வடலூர், கடலூர், சிதம்பரம் சாரண மாவட்டத்தின் சார்பில் 49 பள்ளிகளைச் சார்ந்த 238 சாரணர்களும், 141 சாரணியர்களும், 52 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். தேர்வு முகாம் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது இதில் வீனஸ் குழும பள்ளிகளின் தாளாள ரும் சிதம்பரம் மாவட்ட சாரணர் தலை வரும் வீனஸ் குமார் தலைமை தாங்கி னார். பள்ளியின் துணை தாளாளர் ரூபியால் ராணி, முதல்வர் நாகேந்திரன், பயிற்சியாளர் இளையகுமார், வடலூர் மாவட்ட சாரண ஆணையர் முருகையன், கடலூர் மாவட்ட சாரண்ய ஆணையர் சுகிர்தா தாமஸ் ஆகியோர் முகாம் குறித்து பேசினர். முகாமில் சாரண உறுதிமொழி சார்ந்த சட்டம், குறிக்கோள் பாடல்கள், முத லுதவி, நிலப்பட கலை, முடிச்சுகள், கூடாரம் அமைத்தல், மதிப்பீடு போன்ற பாடத்திட்ட செயல்முறை மற்றும் எழுத்து தேர்வுகள் நடைபெற்றது. சிதம்பரம் மாவட்ட செயலர் பாக்யராஜ், அமைப்பு ஆணையர்கள் ஆர்ம்ஸ்ட்ராங், கோமதி, எழில் ராஜ், விஜயசாந்தி, வெங்க டேசன், சோமசுந்தரம், சிவக்குமார் ஆகி யோர் முகாம் ஏற்பாடுகளை செய்தி ருந்தனர். நிறைவாக மாவட்ட சாரண செயலாளர் செல்வநாதன் நன்றி கூறினார்.