districts

img

கல்லூரி மாணவர்களுக்கு பிரிவு உபச்சார விழா

கள்ளக்குறிச்சி,ஏப்.3- கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபச்சார விழா,மன்றங்கள் நிறைவு விழா,மலர் வெளி யீட்டு விழா என்ற முப்பெ ரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி யின் முதல்வர் ஆ.முனியன் தமிழின் சிறப்பைக் கூறி தலைமையுரையாற்றினார்.சிறப்பு விருந்தினராக மாவட்ட மனித உரிமை கள் தலைவர்,எ.பி. அருண்கென்னடி, தமிழ்த்துறைத்தலைவர் மா.மோட்சஆனந்தன், மக்கள் உரிமை நுகர் வோர் பாதுகாப்பு தலைவர். என்.எஸ்.சுப்ரமணியன், வேதியியல் துறைத் தலைவர்  தர்மராஜா, வணிகவியல் துறைத்தலை வர்  வீரலட்சுமி,ஆங்கிலத் துறைத் தலைவர் முருகானந் தன், உடற்கல்வி இயக்குநர் சரவணன்,நூலகர் அசோக் குமார் ஆகியோர் இவ்விழா வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விளையாட்டு போட்டி யில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசு வழங்கப் பட்டது.மாணவர்கள்  எழுதிய படைப்புகள் மலராக தொகுக்கப்பட்டு சிறப்பு விருந்தினர் வெளி யிட, கல்லூரி முதல்வர்  பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் தமிழ்த்துறை இரண்டாம் ஆண்டு மாணவி மலர்வரவேற்றார். நிகழ்ச்சி முடிவில் முதலாம் ஆண்டு மாணவி ஜான்சிராணி,நன்றி கூறினார்.