districts

img

கேரளா சுற்றுலாத்துறையின் புதிய மைல் கல்

கொச்சி , நவ.12- சுற்றுலா கனவுகளின் புதிய சிறகு களுடன் கொச்சி காயலில் (உப்பங்கழி) இருந்து புறப்பட்ட கேரளாவின் கடல்  விமானம் மாட்டுப்பெட்டி நீல ஏரியில் தரையிறங்கியது. 19 பேர் பயணிக்கக்  கூடிய கனடியன் டி ஹாவில்லேண்ட் கடல் விமானத்தின் சோதனைப் பய ணத்தைக் காண கொச்சி மற்றும்  மாட்டுப்பெட்டியில் ஆயிரக்கணக்கா னோர் குவிந்தனர். சுற்றுலாத் துறை அமைச்சர் பி.ஏ. முஹம்மது ரியாஸ் நவ.11 திங்க ளன்று காலை கடல் விமானத்தை கொடி யசைத்து துவக்கி வைத்தார். அமைச் சர்கள் பி.ராஜீவ், வி.சிவன்குட்டி, மேயர் எம்.அனில்குமார் மற்றும்  துறைச் செயலாளர்கள் உடனிருந்தனர். அதன்பிறகு, கொச்சியில் உள்ள  போல்காட்டி பேலஸ் வாட்டர்ட்ரோ மில் இருந்து பகல் 10.25 மணிக்கு சோதனை தொடங்கியது. 10.55க்கு மாட்டுப்பெட்டியைச் சென்றடைந்தது. அமைச்சர் ரோஷி அகஸ்டின், எம்.எம்.மணி எம்எல்ஏ, தேவிகுளம் சாராட்சியர் வி.எம்.ஜெயகிருஷ்ணன், அணை பாதுகாப்பு செயற்பொறியாளர் எஸ்.நந்தகுமார் ஆகியோர் வரவேற்றனர். ஓடுபாதை தேவை இல்லை டேக்ஆப்-க்கு ஓடுபாதை தேவைப் படாத கடல் விமானம் தண்ணீருக்குள் நகர்ந்து புறப்பட்டது. 9, 15, 20 மற்றும்  30 இருக்கைகள் கொண்ட சிறிய விமா னங்கள் தரையிலும் நீரிலுமாக பய ணத்தை துவக்கியது.  இது கேரளத்தில் தொடங்கப் படும் முதலாவது நீர் விமான மாகும். இந்த திட்டம் கேரளத்தில் உள்ள  நான்கு விமான நிலையங்களுக்கும் இடையிலான இணைப்பை அதி கரிக்கும்.