districts

img

மழைகாரணமாக மூடப்பட்ட பள்ளிகள் மீண்டும் திங்கட்கிழமை (டிச. 11)  திறக்கப்படும்

மழைகாரணமாக மூடப்பட்ட பள்ளிகள் மீண்டும் திங்கட்கிழமை (டிச. 11)  திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளில் ஒரு பகுதியாக இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தண்டையார்பேட்டை பட்டேல் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகளை சுத்தம் செய்தனர். இதில் மாநிலக் குழு உறுப்பினர் குணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நிர்வேஷ், ஐஸ்வர்யா, அலீம் (மாணவர் சங்கம்), பாஷா, பழனி (வாலிபர் சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.