திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பிரபு, பொதுச் செயலாளர் பாரி மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.