districts

img

புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காவல்துறையினர் வாகனங்களுக்கு அதிகப்படியான அபராதங்களை வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும்,  திருத்தணி போக்குவரத்து வட்டார அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளரை நிரந்தரமாக பணியில் அமர்த்த வேண்டும்.  என வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் திருத்தணியில் வியாழனன்று (டிச.1) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி தலைவர் எம்.ஜெ.ரகுபதி தலைமை தாங்கினார். சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.விஜயன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.ஜெயவேல், ஆட்டோ சங்கத்தின் மாவட்ட தலைவர் ஏ.கரிமுல்லா, பகுதி நிர்வாகிகள் பாண்டியன், யு.கரிமுல்லா, விவசாயிகள் சங்கத்தின் பகுதி செயலாளர் ஏ.அப்சல்அகமது ஆகியோர் பேசினர்.