districts

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயல்

திருவள்ளுர், மே 14-

    பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட உப்பளம் பரிக்கப்பட்டு, கிராமங்களில்  டெங்கு காய்ச்சல்  பரவிவருவதையொட்டி பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

   அப்பகுதி மக்களின் ரத்தம் பரிசோதனையில் 5-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது. மேலும் 20- கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், காய்ச்சல்  பரவிவரும் பகுதியில் கொசு மருந்து அடித்தல், குப்பைகளை  அகற்றுதல், குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல், உள்ளிட்ட பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

   ஒவ்வொரு தெருவிலும் பத்துக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல்  இருப்பதால் மருத்துவ முகாம் அமைத்து காய்ச்சல் மேலும்  பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.