வேலூர், டிச.12 - வருவாய் துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வேலூர் மாவட்ட 9 வது மாநாடு மாவட்டத் தலைவர் டி.டி.ஜோஷி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வி.ரமேஷ் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் இ.மணி கண்டன், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் அ.சேகர், ஊரக வளர்ச்சித் துறை அலு வலர் சங்க மாவட்ட செயலாளர் பா.வேலு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.தீன தயாளன் நன்றி கூறினார். முன்னதாக சங்கத்தின் வைரவிழா கல்வெட்டை மாநில துணைத் தலைவர் இ.மணிகண்டன் திறந்து வைத்தார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணப்பயன் மற்றும் 21 மாத ஊதிய குழு நிலுவை உடனடியாக வழங்க வேண்டும். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப புதிய கிராமங்கள் மற்றும் புதிய உள்வட்டங்கள் ஏற்படுத்த வேண்டும். காட்பாடி, பேர்ணாம்பட்டு மற்றும் கீ.வ.குப்பம் வட்டாட்சியர் அலுவலகங்க ளில் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் வந்து செல்ல ஏதுவாக அரசு பேருந்துகள் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவ லகம் வரை அனைத்து நகரப் பேருந்து களும் வந்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிர்வாகிகள் மாவட்ட தலைவராக டி.டி.ஜோஷி, செயலாளராக வி.ரமேஷ், பொருளாளராக எம்.எஸ்.தீனதயாளன் தேர்வு செய்யப்பட்டனர்.