செங்கல்பட்டு,மே 24-
உயர வளர்ச்சி தடைப் பட்ட நாகராஜின் உரு வத்தை கேலி செய்து கோபப்படுத்திய காவல் நிலைய எழுத்தர் ராஜ சேகர் மீது துறைவாரி நட வடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட நிர்காவாகிகள் வல்துறை கண்காணிப்பா ளரிடம் மனு அளித்தனர்.
உயர வளர்ச்சி தடை பட்டோருக்கான சங்கத்தின் பொருளாளராகவும், மாவட்டக் குழு உறுப்பி னராகவும் உள்ள கு.நாக ராஜ், கடந்த மே 12ஆம் தேதி கூவத்தூர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த எழுத்தர் ராஜசேகரன், நாகராஜின் உருவத்தை கேலி செய்து அவமானப்படுத்தியுள்ளார்.
வீட்டிற்கு சென்று கொண்டிருந்தவரை வலுக் கட்டாயமாக காவல்நிலை யத்தில் அழைத்து அவ மானப்படுத்தியதை தாங்காது அவர் கோபத்தில் பேசியதை வீடி யோவாக எடுத்து எடிட் செய்து ராஜசேகர் இணை யத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதையே ஆதாரமாக வைத்து நாக ராஜை அடித்து தொடை எலும்பை உடைத்துள்ளார்.
மனித உரிமை மீற லில் ஈடுபட்ட எழுத்தர் மீது உரிய நடவடிகை எடுக்கக்கோரி சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம். வெள்ளி கண்ணன், மாவட்ட செயலாளர் எஸ் தாட்சாயணி ஆகியோர் காவல்துறை கண்காணிப்பு அதிகாரியிடம் மனு அளித்த னர்.