காஞ்சிபுரம், ஆக.27- மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை பிற மாநிலங்கள் போல் ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் குன்றத்தூர் ஒன்றிய கோரிக்கை மாநாடு வலியுறுத்தி யுள்ளது. படப்பையில் ஞாயிறன்று (ஆக.25), ஏ.ராமு தலைமையில் நடைபெற்ற மாநாட்டை துவக்கி வைத்து சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், நிறைவு செய்து மாநிலத் துணைத் தலைவர் ப.சு.பாரதி அண்ணா பேசினர். முன்னதாக கே.செல்வம் வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர் கே.பி.பாபு, மாவட்டச் செயலாளர் வி.முனுசாமி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பி.ரமேஷ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் எஸ்.திருஞானம், சமூக செயற்பாட்டாளர் எஸ்.விஜயலட்சமி, கே.அண்ணாதுரை உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். புதிய நிர்வாகிகள் ஒன்றிய தலைவராக கே.அண்ணாதுரை, செயலாளராக ஏ.ராமு, பொருளாளராக பி.வெங்கடேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் இலவச வீடு மற்றும் மனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்த தகுதியுள்ள அனை வருக்கும் உடனடியாக வழங்க வேண்டும். விண்ணப்பித்து காத்திருக்கும் அனை வருக்கும் உதவித்தொகை வழங்க வழங்க வேண்டும், நூறு நாள் வேலை திட்டத்தில் பணி நேரத்தை 4 மணி நேரமாக குறைக்க வேண்டும், எட்டு மணி நேரம் என மாற்றம் செய்த ஆணையை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.