districts

img

அண்ணாமலைநகர் சுரங்கப்பாதையை விரைந்துமுடிக்க கோரிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டு நோக்கங்களை விளக்கியும், திருவொற்றியூர் அண்ணாமலை நகர் சுரங்கப்பாதை பணிகளை தொடங்கி விரைந்து முடிக்க வலியுறுத்தி திருவொற்றியூர் தெற்கு பகுதி 13ஆவது வட்ட கிளைச் செயலாளர் சுவாமிதாஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் வட சென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயராமன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர் ஆர் செல்வகுமாரி, தெற்கு பகுதிச் செயலாளர் ஆர் கருணாநிதி, வடக்கு பகுதி செயலாளர் எஸ்.கதிர்வேல், நிர்வாகிகள் த.ஆண்ட்ரூஸ், அருமைராஜ், கஸ்தூரி, அம்சா பாய், இ.செல்வம், வடிவேல் ஆகியோர் பேசினர்.