திருவண்ணாமலை, பிப். 13- குறைந்தபட்ச ஊதிய உத்தரவை அமல்படுத்த கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிஐடியு சங்கத்தில் உள்ள துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர். தினக்கூலியாக ரூ 610 வழங்க வேண்டும், பிடித்தம் செய்த இஎஸ்ஐ, இபிஎப் உரிய கணக்கில் செலுத்தி, அதற்கான ரசீது வழங்க வேண்டும். தேசிய பண்டிகை காலங்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும், பண்டிகை நாட்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டை சம்பளம் வழங்க வேண்டும், துப்புரவு பணிக்கான பாதுகாப்பு உபகரணங்கள், பணி உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் வலி யுறுத்தியுள்ளனர். சிஐடியு மாவட்ட செய லாளர் இரா.பாரி, மாவட்ட துணைத் தலை வர் பி.கணபதி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.