districts

img

அவ்வை நடுநிலைப்பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது

தாம்பரத்தில் உள்ள ஜீவா நினைவு அறக்கட்டளையின் கீழ் இயங்கும் அவ்வை நடுநிலைப்பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் ஆலோசகர் ஜி.வி.மணிமாறன் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். இந்த விழாவில் பள்ளி நிர்வாக குழுத்தலைவர் கண்ணன்,செயலாளர் ஜீவா மணிக்குமார், தலைமை ஆசிரியர்  மு.இரத்தினமாலா மற்றும் குழந்தைகளின் பெற்றோர் கலந்துகொண்டனர். விழாவில் பள்ளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.