districts

img

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அன்னை அஞ்சுகம் நகரில் உள்ள 160 மாணவர்களுக்கு புத்தகப் பை, பேனா, நோட்டு, புத்தகங்கள், பென்சில், ஸ்கேல் உள்ளிட்ட பொருட்களை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் செவ்வாயன்று (டிச. 12) வழங்கினார். இதில் மாநில செயலாளர் தி.அருள்குமார், பொருளாளர் உதயகுமார், மாநில மகளிர் அணி செயலாளர் வந்தனா, மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் பேகம் மாநில துணைச்செயலாளர் செங்கல்பட்டு மாவட்ட பொருளாளர் கந்தன், துணைத் தலைவர் டில்லிபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருமுல்லைவாயில் 28ஆவது வார்டு கணபதி நகர், இந்திரா நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆவடி டியூப் புராடக்ட்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தின் உதவியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.பூபாலன் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் மாமன்ற உறுப்பினர் ஏ.ஜான், பகுதி குழு உறுப்பினர்கள் லதா, ராபர்ட் ராஜ், நிர்வாகிகள் கனகராஜ், குணசேகரன், ராஜன், சுரேஷ், கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட திருவொற்றியூர் 4ஆவது வார்டுக்குட்பட்ட முருகப்பா நகரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநில குழு சார்பில் ராமகிருஷ்ணா மடத்தின் உதவியோடு 400 பேருக்கு மாநில  பொதுச் செயலாளர் ராதிகா, மாநிலப் பொருளாளர் பிரமிளா, மாவட்ட செயலாளர் எஸ்.பாக்கியம், பகுதி செயலாளர் கஸ்தூரி, மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் ஆகியோர் நிவாரணப்பொருட்களை வழங்கினர்.

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மயிலாப்பூர் கணேசபுரம் பகுதி மக்களுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தென்சென்னை மாவட்ட பொருளாளர் பி.ஆர்.முரளி நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

மிக்ஜம் புயல், கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, பால், குடிநீர் வழங்குவது போன்ற நிவாரண பணிகளில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வடசென்னை மாவட்டக்குழு ஈடுபட்டு வருகிறது. இதன்  ஒரு பகுதியாக ஆர்.கே. நகர் 41ஆவது வார்டில் சாலைகளில் படிந்துள்ள சகதி மற்றும் குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் மாநிலச் செயலாளர் ராதிகா, மாவட்டத் தலைவர் எம்.கோடீஸ்வரி, செயலாளர் எம்.பாக்கியலட்சுமி, மாமன்ற உறுப்பினர் பா.விமலா ஆகியோர் ஈடுபட்டனர்.

புயல் மழையால் பாதிக்கப்பட்ட பல்லாவரத்தை அருகே உள்ள அனகாபுத்தூரை சேர்ந்த 50 மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் ரூ60 ஆயிரம்  மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை ‘விஜய் டிவி’ புகழ் அமுதவாணன் வழங்கினார். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் நிர்வாகிகள் ரேவதி, ரமேஷ்பாபு, ராஜேந்திரன், ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.