சென்னை, ஜூன் 12–
சென்னையில் பிரமாண்ட உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. ஐபிசிஏ லே பரட்டரீஸ் உடன் இணைந்து வேர்ல்டு ஹைபர்டென்ஷன் லீக் என்ற அமைப்ப இதனை நடத்தியது.
இதில் பல்வேறு மருத்துவமனைகளைச் சேர்ந்த 200 மருத்துவர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்து கொண்டு உயர் ரத்த அழுத்தம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
வேர்ல்டு ஹைபர் டென்ஷன் லீக் உலகளவில் உயர் ரத்த அழுத்தத்தைத் தடுப்பதிலும் கட்டுப்படுத்து வதிலும் முக்கிய பங்கு வகிக்கும் லாப நோக்க மில்லாத மற்றும் அரசு சாரா அமைப்பாகும். உயர் ரத்த அழுத்தம் என்பது ஒரு தொற்றா நோயாகும். இது உலகளவில் இறப்பு மற்றும் இயலாமைக்கான முக்கிய நோயாக இருந்து வருகிறது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து இந்த அமைப்பின் துணைத் தலை வர் டாக்டர் எஸ்.என். நரசி ங்கன் கூறுகையில், உயி ருக்கு ஆபத்தான பல இதய சிக்கல்களுக்கு வழி வகுக்கும் உயர் ரத்த அழுத்த அபாயம் குறித்து இந்திய மக்களுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் என்றார்.
ஏனெனில் இங்குள்ள பலர் அது தொடர்பான போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் உயர் ரத்த அழுத்த நோயை புறக்கணிப்பதோடு, அதற்கு முறையான சிகிச்சை எடுக்காமல் விட்டு விடுகின்றனர். எனவே அதை கருத்தில் கொண்டு இந்த முயற்சியை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.