districts

img

உளுந்து கொள்முதல் விலை குறைப்பு: விவசாயிகள் கண்டனம்

கள்ளக்குறிச்சி, பிப்.9 - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர் பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் உளுந்து மற்றும் நெல் அறுவடை பணி கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அறுவடை செய்த விளைப்பொருட்களை விவசாயிகள் விற்பனைக்காக உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரு கின்றனர். இங்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம்  மூட்டை உளுந்து , 7 ஆயிரம்  மூட்டை நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக  ஒரு மூட்டை உளுந்து ரூ. 10 ஆயிரத்து 500 க்கு கொள்முதல் செய்தனர். அதேபோல் நெல் ரூ. 2250 வரை கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை(பிப்.8) அன்று ஒரு மூட்டை உளுந்து ரூ. 9,500 என குறைந்த விலைக்கு கொள்முதல் செய்தனர். இதனால் கோபமடைந்த விவ சாயிகள் 100க்கும் மேற்பட்டோர் ஒழுங்கு முறை விற்பனை கூடம் முன்பாக உளுந்தூர்பேட்டை- சென்னை சாலையில்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை காவல் துறை யினர் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு, அனைவரும் கலைந்து சென்றனர்.