மின்னணு பொருட்கள்: தமிழகம் முன்னிலை
சென்னை,பிப்.29 மின்னணு பொருட்களின் ஏற்றுமதியில், இந்தியாவி லேயே முன்னணி மாநில மாக விளங்கிடும் தமிழ் நாடு, தொடர்ச்சியாக, இந்நிலையை உறுதிப் படுத்தி வருகிறது. மின்னணுவியல் ஏற்று மதி தற்போது 7.37 பில்லி யன் டாலரை அடைந்து ள்ளது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியே 22.65 பில்லியன் டாலர் எனும்போது, தமிழ்நாட்டின் ஏற்றுமதி, நாட்டின் மொத்த ஏற்றுமதியில், கிட்டத்தட்ட 32.52 சதவிகிதம் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் முந்தைய நிதி யாண்டில் (2022-2023) மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி 5.37 பில்லியன் டாலராக இருந்தது என்றார்.
டப்பிங் கலைஞர்கள் சங்கத் தேர்தல் ராதாரவியை எதிர்த்து ராஜேந்திரன்
சென்னை,பிப்.29- தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் டப்பிங் கலைஞர்களின் சங்கத்திற்கு 2024 - 2026ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் 17ஆம் தேதி நடை பெறுகிறது. இந்த தேர்தலில் நடிகரும், தற்போதைய இந்த சங்கத்தின் தலைவருமான ராதாரவி மீண்டும் போட்டியிடுகிறார். சமீபத்தில் தனது வேட்புமனுவை அவர் தாக்கல் செய்தார். தற்போது, துணைத் தலைவராக இருக்கும் ராஜேந்திரன் தலைமையில், ராதாரவிக்கு எதிராக ஒரு அணியினரும் களம் இறங்குகின்றனர். மொத்தம் 23 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ராதாரவியை எதிர்த்து தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ராஜேந்திரன், மனுத் தாக்கல் செய்தார். அதற்கு பிறகு ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, தற்போதைய தலைவர் ராதாரவி மற்றும் கதிரேசன் உள்ளிட்டவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதில், குறிப்பாக தற்போதைய நிர்வாகத்தினரால் உறுப்பினர்கள் அசிங்கப்படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. உறுப்பினர்களை இழிவாகப் பார்க்கின்றனர் என்பது வேதனை அளிக்கிறது. நிர்வாகிகள் மட்டுமல்லாமல், சங்கத்தில் மேலாளராகப் பணியாற்றுபவரும் உறுப்பினர்களை தரக்குறைவாக நடத்துகிறார் என்று குற்றம் சாட்டினர். மேலும், சங்கத்தின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டே வருகிறோம் என்றும் கூறினார். இதுகுறித்து தலைவர் ராதாரவியிடம் பலமுறை கூறியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். இந்த நிலையில், தற்போதைய நிர்வாகத்தால் நீக்கப்பட்டு இருக்கும் பின்னணிப் பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி, மீண்டும் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்படுவார் என ராஜேந்திரன் கூறினார். அத்துடன் தற்போது உறுப்பினர்களாக சேர்வதற்கு இரண்டு லட்சம் ரூபாய் பணம் செலுத்த வேண்டியுள்ளது. அதை நாங்கள் குறைப்போம் என்றும் அவர் கூறினார்.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் புதிய ஸ்மார்ட் போன்
சென்னை, பிப். 29- ஐக்யூஓஓ ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் விரைவில் வெளிவரவிருக்கும் புதிய நியோ புரோ 9 ஸ்மார்ட்போன் விளம்பர தூதராக துல்கர் சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நடித்த புதிய டிஜிட்டல் விளம்பரத்தை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஸ்ச்பாங் மற்றும் ஐக்யூஓஓ ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இந்த முதல் விளம்பர வீடியோவில் ஏராளமான சிறப்பு அம்சங்களுடன் சிறந்த ஸ்மார்ட்போன் ஒன்று விரைவில் வரவுள்ளது என்று கூறி அதன் அறிமுகத்திற்கு முன்பே அதன் மீதான எதிர்பார்ப்பை அவர் ஏற்படுத்தி உள்ளார்.
மாணவர் சேர்க்கை சரிவு: அண்ணா பல்கலை.யின் அங்கீகாரத்தை இழக்கும் 11 பொறியியல் கல்லூரிகள்
சென்னை, பிப்.29- குறைவான மாணவர் சேர்க்கை கொண்ட 11 பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத் தின் இணைப்பு அங்கீ காரத்தை இழக்கின்றன. 2023-24ம் கல்வியாண் டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடந்து முடிந்து கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 440 பொறியியல் கல்லூரி களில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.முந்தைய ஆண்டுகளில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து காணப்பட்ட நிலையில், 2023-24ம் கல்வியாண்டில் ஓரளவுக்கு மாணவர் சேர்க்கை இருந்தது.செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரித்ததன் காரணமாக பொறியியல் கல்லூரிகளை நோக்கி மாண வர்கள் செல்லத் தொடங்கி யுள்ளனர். இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 5 விழுக்காடுக்கும் குறைவாக கொண்ட 11 பொறியியல் கல்லூரி களுக்கு 2024-25ம் கல்வி யாண்டில் இணைப்பு அங்கீ காரத்தை வழங்குவதில்லை என்ற முடிவை அண்ணா பல்கலைக்கழகம் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மட்டுமல்லாமல், பொறியி யல் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் மாணவர் சேர்க்கை குறை வாக உள்ள கல்லூரிகளுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
கிளாம்பாக்கத்திலிருந்து 420 சிறப்பு பேருந்துகள்
சென்னை, பிப். 29- கிளாம்பாக்கம் பேருந்து நிலை யத்திலிருந்து வார இறுதியையொட்டி, பல்வேறு ஊர்களுக்கு 420 சிறப்புப் பேருந்துகளை தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் இயக்கள்ளது வார இறுதி நாட்களான வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை (மார்ச் 1, 2) ஆகிய நாட்களில் கிளாம் பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சிதம்பரம், திருவண்ணாமலை, விருத்தா சலம், போளூா் ஆகிய ஊர்களுக்கு பொது மக்கள் அதிகளவில் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை 180 சிறப்புப் பேருந்துகளும், சனிக்கிழமை மேலும் 240 சிறப்புப் பேருந்துகள் மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழக இணையதளம் மூலம் பதிவு செய்து சிறப்புப் பேருந்துகளில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசி விஸ்வநாதர் கோவிலின் நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, பிப்,29- ஓசூர் காசிவிஸ்வநாதர் கோயிலின் நில ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சென்னை உயர் நீதி மன்றத்தில், சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜுஜுவாடி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது.இந்த கோயிலுக்குச் சொந்தமான பல நிலங்கள் ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதி களில் அதிகமாக உள்ளன. அதில் ஜுஜுவாடி கிராமத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவில் நிலங்களை கடந்த 2015-ம் ஆண்டு முதல் தனி நபர்கள் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே, அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தர விட வேண்டும் என்று மனுவில் கோரி யிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், காசிவிஸ்வநாதர் கோயில் ஆக்கிரமிப்பு தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு மற்றும் 2018-ம் ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு மனு அளிக்கப் பட்டது. ஆனால், அந்த மனுக்க ளின் மீது இதுவரை எந்தவித மான நடவடிக்கையும் எடுக்க வில்லை. குறிப்பாக காசிவிஸ்வ நாதர் கோவில் நிலத்துக்கு சிலர் சட்டவிரோதமாக பட்டா பெற்றுள்ளனர், என்று தெரி விக்கப்பட்டது. அப்போது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில், கோயில் நிலத்தை சொந்த மாக்க தனிநபர்களால் பதிவு செய்யப்பட்டுள்ள சட்ட விரோத பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணைக்கு ஆஜராக உத்தர விட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஓசூர் ஜுஜுவாடி காசிவிஸ்வநாதர் கோவிலுக்குச் சொந்தமான நில அக்கிரமிப்புகள் தொடர்பாக விரைந்து விசாரணை நடத்தி, காவல்துறை உதவியுடன் ஆக்கிர மிப்புகளை அகற்ற இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
உணவுக் கலப்படம் குறித்த விழிப்புணர்வு
திருவண்ணாமலை, பிப். 29- திருவண்ணாமலை எஸ்கேபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு “உணவுக் கலப்படம்” என்ற தலைப்பில் அறிவியல் மன்றம் சார்பாக விழிப்புணர்வு சொற்பொழிவு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்.கே.பி கல்வி குழுமத்தின் தலைவர் கு.கருணாநிதி தலைமை தாங்கி னார். சண்முகா இண்டஸ்ட்ரீஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேதியியல் துறைத் தலைவர் தினேஷ் கார்த்திக் விரிவுரை யாற்றினார். கல்வி குழுமத்தின் இணைச் செயலாளர் கே.வி.அரங்க சாமி மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி ஆர்.சக்தி கிருஷ்ணன், கல்லூரியின் முதல்வர் ஆர்.எஸ்.வெற்றவேல் ஆகியோர் பங்கேற்று பேசினர். மேலும் இந்நிகழ்ச்சியினை அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பா ளர் ஆர். ஆதித்யன் ஒருங்கி ணைத்தார்.
விரைவு அஞ்சலில் மட்டுமே ஒட்டுநர் உரிமங்கள்
கள்ளக்குறிச்சி, பிப்,29- கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மற்றும் உளுந்தூர்பேட்டை வட்டாரப் போக்கு வரத்து அலுவலகங்களின் மூலம் ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் பதிவுச்சான்றுகள் விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், எக்காரணம் கொண்டும் விண்ணப்பதாரருக்கு நேரடியாக வழங்கக் கூடாது எனவும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி யுள்ளது. அதனடிப்படையில் ஓட்டுநர் உரி மங்கள் மற்றும் பதிவுச் சான்றுகள் வாகன் மற்றும் சாரதி மென்பொருளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்க ளுடைய விண்ணப்பத்தில் சரியான அலை பேசி எண் மற்றும் முகவரி பதிவு செய்திட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.