திருவள்ளுவர் தின விழா புதுச்சேரி அரசு சார்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மறைமலை அடிகள் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் உருவச்சிலைக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி,சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சரவணன் குமார், மற்றம் சட்ட மன்ற உறுப்பினர்கள்,தமிழ் அறிஞர்கள் உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.