விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஜக்கம்பேட்டையில் 16 ஏக்கர் அரசு தரிசு நிலத்தை சீரமைத்து விளை நிலங்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை பாராட்டும் வகையில் ஊரக வளர்ச்சி முதன்மைச் செயலாளர் ஹர்சகாய் மீனா அந்த நிலத்தில் உளுந்து பயிரை விதைத்து திட்டத்தை தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் மோகன், கூடுதல் ஆட்சியர் சித்ரா, சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா, வேளாண் துறை இணை இயக்குனர் பெரியசாமி உட்பட பலர் இருந்தனர்.