கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ப்ரீபெய்ட் ஆட்டோ
செங்கல்பட்டு, ஜன.19- கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ப்ரீபெய்ட் ஆட்டோ பயன்பாட்டிற்கு வந்த நிலையில் சுமார் 200 ஆட்டோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆட்டோ சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சிஎம்டி அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் சார்பில் அரங்கு அமைக்கப்பட்டு ஆட்டோக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ள இந்த பணி ஒரு கிலோமீட்டருக்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக ரூ18 வசூலிக் கப்படுகிறது. ஆட்டோக்கள், ஓட்டு நர்கள் முறையாக அரசு அதிகாரிகளால் பரிசோ தனை செய்யப்பட்டு, ஆட்டோ காப்பீடு, ஓட்டு நருக்கு லைசென்ஸ் மற்றும் பேட்ச் உள்ளதா என அனைத் தும் சரியாக உள்ளதா என சோதனை செய்யப்பட்ட பிறகு ஆட்டோ ஓட்டுநர்கள் ஏற்றுக்கொள்ளப்படு கின்றனர். இதை விரிவு படுத்த நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளதாக அதிகாரி கள் தெரிவித்தனர்.
ஆற்காடு வீராசாமி மருத்துவமனையில் அனுமதி
சென்னை,ஜன.19- முன்னாள் அமைச்சரும், திமுக மூத்த தலைவருமான ஆற்காடு வீராசாமி (92) முதுமை காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வரு கிறார். இந்நிலையில், அவ ருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள் ளார். அவருக்கு முட நீக்கி யல் துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவ தாக தகவல்கள் தெரிவிக் கின்றன. தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங் கள் தெரிவித்தன.
5 மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு
சென்னை, ஜன. 16- ஐக்யூஓஓ நிறுவனம் குடியரசு தினத்தையொட்டி அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் தனது குறிப்பிட்ட இசட்7எஸ், இசட்7 புரோ, நியோ 7 புரோ, ஐக்யூஓஓ 12, நியோ 7 ஆகிய 5 மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் அமேசான் பிரைம் உறுப்பினர்க ளுக்கு ஏற்கனவே துவங்கி உள்ள நிலையில் இதர வாடிக்கை யாளர்களுக்கு வரும் 18-ந்தேதி இரவு மணி 11.59 வரை கிடைக்கும். ஐக்யூஓஓ நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை வாடிக்கை யாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. அறிமுக நாளில் அமேசான் தளத்தில் அதிகம் விற்பனையான 5ஜி ஸ்மார்ட்போன்களாகவும் இவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, திருவள்ளூரில் இன்று பள்ளிகள் செயல்படும்
சென்னை,ஜன.19- கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜம் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டன. இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக சனிக்கிழமை களில் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.அந்த வகையில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
காஞ்சிபுரம்,ஜன.19- ஜனவரி மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 23-ந்தேதி காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அவரது அலுவலகவளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள்கோரிக்கைகளை தெரிவிக்கலாம். மேலும் பி.எம். கிசான் திட்டத்தில் அடுத்து விடுவிக்கப்பட உள்ள தவணைத்தொகையினை பெறும் வகையில் அனைவரும் கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும். பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம். http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் இ-கே.ஒய்.சி. எனும் பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம் என மாவட்டஆட்சியர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சீர்மரபின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: ஆட்சியர் தகவல்
விழுப்புரம்,ஜன.19- அரசுப் பள்ளிகளில் 9, 10 ஆம் வகுப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். இது குறித்து ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பு வருமாறு:- ஒன்றிய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 9, 10-ம் வகுப்புகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோரின் உச்சகட்ட ஆண்டு வருமானம் ரூ.25 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 9, 10-ம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது அஞ்சல் வங்கிகளில் தங்கள் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி அதனை ஆதார் எண்ணுடன் இணைந்திருக்க வேண்டும். ஆதார் எண் மற்றும் வங்கி விவரங்களை வருமானச் சான்று மற்றும் சாதிச் சான்று நகல்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களின் விவரங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.