திருவள்ளூர், ஜன 11- வடசென்னை அனல்மின் நிலைய நிர்வாகத்தை கண்டித்து நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் புதனன்று (ஜன 10), ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடசென்னை அனல்மின் நிலைய நிர்வாகம் ஞானமணி என்கிற ஒப்பந்ததா ரரின் தவறான செயல்பாட்டிற்கு துணை போகும் மேற்பார்வை பொறியாளர், மின்னி யல் செயற்பொறியாளர் - மின்னியல், தொழி லாளர் நல அலுவலர் (2) , ஆகிய அதி காரிகளை வன்மையாக கண்டித்தனர். நுஆ-ஐஐ-குடீஊ பிரிவில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் சி.மோகன் மாத ஊதியம் கேட்டதற்கு பணி நீக்கம் செய்துள்ளனர். ஞானமணி என்ற ஒப்பந்ததாரர் கடந்த 18 மாதங்கள் பிஎப், ஈஎஸ்ஐ தொழிலாளர்களின் கணக்கில் செலுத்த வில்லை. தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு சாதனங்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வடசென்னை அனல்மின் நிலையம் பிரிவு ஐ தலைமை நிர்வாகத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு வடசென்னை அனல்மின் நிலையம் -1 நிர்வாகி ஜி.பாண்டியன் தலைமை தாங்கினார். சிஐடியு நிர்வாகி இ.ஜெய வேலு உட்பட்ட பலர் பேசினர்.