திருபெரும்புதூரில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை கேட்டு செவ்வாயன்று (அக்.1), கும்மிடிப்பூண்டியில் சிஐடியு - வின் மாநில துணைத்தலைவர் கே.விஜயன் தலைமையில் மறியல் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக செல்லமுயன்ற தொழிலாளர்களை நகர விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த போராட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், பொருளாளர் என்.நித்தியானந்தம், மாவட்ட நிர்வாகிகள் ஏ.ஜி.சந்தானம், கே.அர்ஜுனன், ஜி.வினாயகமூர்த்தி, எம்.சந்திரசேகரன் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் கைதாகினர்.