மதுராந்தகம் அருகே பெருங்கரணை, இருளர் பகுதியை சேர்ந்த சின்ன தம்பி (30), அவரது மாமியார் வசந்தா ஆகியோர் விஷச்சாராயம் குடித்து பலியாகினர். சின்னத் தம்பியின் மனைவி அஞ்சலி (22)செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் விஷச்சாராயம் குடித்ததில் பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்த வென்னியம்பன் (65) , அவரது மனைவி சந்திரா (55) பெருங்கருணை கிராமத்தைச் சேர்ந்த முத்து (55) ஆகியோரும் அடுத்தடுத்து பலியாகினர். புத்தூர் மற்றும் கீழ் கயப்பாக்கம் பகுதிகளில் வசித்து வரும் இருளர் இனத்தைச் சார்ந்த மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். இந்த தகவலை அறிந்த தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் செயலாளர் சரவணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் ஜி புருஷோத்தமன், வள்ளிக்கண்ணன், ரவிச்சந்திரன் ரவிச்சந்திரன் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார்