districts

பிஎஸ்வி கல்லூரி அருகில் நிழற்கூடம் இல்லாமல் அவதிப்படும் மக்கள் கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்

கிருஷ்ணகிரி, ஆக. 4-

    பர்கூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை ஒட்டி  ஏராளமான பள்ளிகளும் கல்லூரிகளும் உள்ளன. குறிப்பாக மிட்டப்பள்ளி-ஜெகதேவி சாலை கூடும்  இடத்தில் பிஎஸ்வி பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி யின் எதிரில் மேம்பாலம் உள்ளது.

     அதன் இருபுற மும் நகரப் பேருந்துகள் நிறுத்தம் உள்ளது. மிட்டப்பள்ளி அருகில் இருக்கும் கிராமங்களில் இருந்து கிருஷ்ணகிரி மற்றும் பர்கூருக்கு பேருந் தில் செல்வதற்கு கைக்குழந் தைகளுடன் வரும் பெண் கள், வயதானவர்களும், பிஎஸ்வி கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவர்களும் கல்லூரி முன்பு  வெயிலிலும் மழையிலும் காத்திருந்து நகர பேருந்தில் செல்ல வேண்டியுள்ளது.

    எனவே, இந்த இடத்தில் நிழற்குடை அமைத்து தர  வேண்டும் என்று 10 ஆண்டு களுக்கு மேலாக அரசு  அதிகாரிகளிடம் பொதுமக் கள் பலமுறை முறையிட்ட னர். இதுவரைக்கும் கண்டு கொள்ளவில்லை. மாவட்ட ஆட்சியர் தலையிட வேண் டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.