வண்டலூர், மே 8- அண்ணாஉயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகளை காண நாள்தோறும் ஆயிரக் கணக்கில் மக்கள் திரண்டு வருகின்றனர். வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சிய கம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பி டம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்ப தால் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஞாயிறன்று ஒரே நாளில் 25 ஆயிரம் பேர் பூங்காவை கண்டு ரசித்தனர். கோடை விடுமுறையையொட்டி பார்வையாளர்களின் வசதிக் காக வண்டலூர் உயிரியல் பூங்கா இந்த மாதம் (மே) முழுவதும் செவ்வாய் கிழமை விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து நாட்க ளிலும் திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித் துள்ளது. கோடை வெயிலை சமாளிக்க பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் உள்ளிட்டவை அதிகம் வழங்கப்படுகிறது. யானை களுக்கு ஷவர் குளியல் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளன. யானைகள் ஷவரில் ஆனந்த குளியல் போடுவது பார்வையாளர்களை வெகு வாக கவர்ந்துள்ளது.