கடலூர், நவ.4- கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவ நிலை மாற்றம் அடைந்துள்ளது. அதாவது பகல் நேரங்க ளில் அதிக வெப்பமும் மாலை நேரங்களில் மழை என மாறி மாறி வரும் நிலை யில் பருவநிலை மாற்றம் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் இந்த மர்ம காய்ச்சல் தாக்கி வரும் நிலையில், காய்ச்சல் தாக்கியவர்களுக்கு கடும் கை, கால் குடைச்சல், இருமல், சளியும் சேர்ந்து இருப்பதால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை என பல்வேறு இடங்களில் பொது மக்கள் தங்களை மருத்து வர்களிடம் காண்பித்து வரு கின்றனர். இந்த நிலையில் திங்கள்கிழமை (நவ.4) காலை முதல் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஏராள மான மக்கள் புற நோயாளி களாக வந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து புற நோயாளி சீட்டு பெற்று பின்னர் மருத்து வரிடம் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏராள மானோர் ஒரே நேரத்தில் குவிந்த நிலையில் அரசு மருத்துவமனையில் கடும் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், இட பற்றாக்குறை சமா ளிக்கும் விதமாக கூடுதல் மருத்துவர்களை பணி யில் அமர்த்தி நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பருவநிலை மாற்றத்தால் வரும் சாதாரண காய்ச்சல் தான் என்றும் மூன்று தினங்களில் மருத்துவர்கள் கொடுக்கும் மருந்து சாப்பிட்டால் குணமாகிவிடும் என்றாலும் மூன்று தினங்களுக்கு மேல் இந்த காய்ச்சல் தொடர்ந்தால் அவசியம் ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதேபோல் டெங்கு காய்ச்சல் காரணமாக 13 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டு பேர் சிதம்பரம் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். ஒருபுறம் டெங்கு காய்ச்சல் மறுபுறம் மர்ம காய்ச்சல் என கடலூர் மக்கள் கடும் அவதி அடைந்து வரு கின்றனர்.