காஞ்சிபுரம், நவ.10 - பல ஆண்டுகளாக கோயில் மனைகளில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் மாநகர மாநாடு வலியுறுத்தியுள்ளது. கட்சியின் காஞ்சிபுரம் மாநகர 24ஆவது மாநாடு காஞ்சிபுரத்தில் ஞாயிறன்று (நவ.10) நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஆறுமுகநயினார் மாநாட்டை துவக்கிவைத்து பேசினார். மாநகரச் செயலாளர் டி.ஸ்ரீதர் வேலை அறிக்கையை சமர்ப்பிக்க, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சி.சங்கர், செயற்குழு உறுப்பினர் கே.நேரு ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக பல்லவன் நகர் கிளைச் செயலாளர் ஒய்.சீத்தாராமன் செங்கொடியை ஏற்றிவைக்க, மாநகரக்குழு உறுப்பினர் ஆர்.சௌந்தரி வரவேற்றார். எம்.சூரியபாரதி நன்றி கூறினார். தீர்மானம் காஞ்சிபுரம் மாநகராட்சி உயர்த்திய சொத்து வரியினை திரும்பப்பெற வேண்டும். காஞ்சிபுரம் மாநகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் மூங்கில் மண்டபம், கீரை மண்டபம், கங்கை கொண்டான் மண்டபம். ஓரிக்கை மிலிட்டரி சாலை சந்திப்பு, குஜராத்தி சத்திரம், ஏகாம்பரநாதர் சந்நிதி சந்திப்பு, கம்மாளத்தெரு சந்திப்பு, செவிலி மேடு மிலிட்டரி ரோடு சந்திப்பு. சின்ன காஞ்சிபுரம் செட்டி தெரு சந்திப்பு, வணிகர் வீதி சந்திப்பு, நெல்லுக்கார தெரு - கீழராஜ வீதி ஆகிய சந்திப்புகளில் நவீன தானியங்கி சமிக்ஞை அமைக்க வேண்டும். காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் இருந்து கொரானா காலத்தில் முன்பும் பின்பும் இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்கவேண்டும், செங்கல்பட்டு- அரக்கோணம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க உரிய கருத்துருவினை அனுப்பி நிதி ஒதுக்கீடு பெற்று பணியை தெற்குரயிலவே தொடங்கிட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய வட்டக்குழு தேர்வு மாநாட்டில் 14பேர் கொண்ட காஞ்சிபுரம் மாநகரச் செயலாளராக டி.ஸ்ரீதர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.