மதுராந்தகம், ஜன.19- விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் பயணிகள் மின்சார ரயில் காலதாமதமாக இயக்கப்பட்டதால் மதுராந்த கத்தில் பயணிகள் மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் திண்டிவனம் அச்சரப் பாக்கம் மேல்மருவத்தூர் உள்ளிட்ட பகுதி களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் சென்னைக்கு தினம்தோறும் பணி மற்றும் சொந்த வேலை காரணமாக சென்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விழுப் புரம் பேசஞ்சர் மின்சார ரயில்களையே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக விழுப்புரத்தில் இருந்து மேல்மரு வத்தூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, வழியாக ரயில்கள் சென்னைக்கு இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வெள்ளியன்று (ஜன.19) காலை விழுப்புரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் விழுப்புரம் பயணிகள் ரயில் சென்னை நோக்கி சென்ற மதுராந்தகம் ரயில் நிலையத்தில் நின்றது. இவ்வாறு தாமதமாக வந்ததை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பயணிகள் தண்டவாளத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் பயணிகளிடம் பேசிய போது, தினந்தோறும் சென்னை வரை செல்லும் மின்சார ரயில் காலதாம தமாக இயக்கப்பட்டு வருவதால் குறித்த நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடிய வில்லை. தினமும் 6:30 மணிக்கு வரவேண்டிய ரயில் 7.30 மணி வரை தாமத மாகவே வருவதாக கூறினர். இதுகுறித்து கேட்டபோது அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை எனவும் ரயில் பயணிகள் தெரிவித்தனர். மேலும் அதிகாரி கள் வந்து உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ரயில்வே அலுவலர்கள் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னர் ரயில் பயணிகள் போராட்டத்தை கைவிட்டனர். இதன் காரண மாக விழுப்புரம் சென்னை பயணிகள் ரயில் காலதாமதமாக சென்றது. மேலும் போதிய மின்சார ரயில் வசதி இல்லாததால் கூட்ட நெரிசலில் ரயில் பயணிகள் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக மின்சார ரயில்களை இயக்க வேண்டுமென ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.