districts

img

தாம்பரம் வந்த பயணிகள் ரயிலில் திடீர் கோளாறு

சென்னை, ஜன.8- விழுப்புரத்தில் இருந்து சென்னை தாம்பரம் வரை  வந்த பயணிகள் ரயில் சக்கரம் முற்றிலும் இயங்கா மல் பழுது காரணமாக நிறுத்தப்பட்டது. மதுராந்தகம் அருகே தொழுப்பேடு என்ற இடத்தில்  விழுப்புரத்தில் இருந்து சென்னை தாம்பரம் வரை  வந்த பயணிகள் ரயில்  சக்கரம் முற்றிலும் இயங் காமல் பழுது காரணமாக நிறுத்தப்பட்டது. இதனால் சனிக்கிழமை காலை தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் அரை மணி  நேரம் தாமதமாக சென்னை வந்து சேர்ந்தன. அதன் பின்னால் சென்னை நோக்கி  வந்த நிஜாமுதீன் விரைவு ரயி லில் பயணிகள் அனைவரும் ஏற்றி அனுப்பப்பட்டனர். பழுதாகி நின்ற விழுப் புரம் பயணிகள் ரயில் சக்கரத்தை சரி செய்யும் பணி யில் ரயில்வே துறை ஊழி யர்கள் ஈடுபட்டு வருகின் றனர். குரோம்பேட்டை: கல்லூரியில் 30 மாணவர்க ளுக்கு, ஜவுளி கடையில் 13  பேருக்கு கொரோனா பாதிப்பு. குரோம்பேட்டையில் இயங்கி வரும் மற்றொரு பிரபலமான ஜவுளிக்கடை ஊழியர்கள் 250 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 13 பேருக்கு கொரோனா தொற்று  இருப்பது கண்டறியப் பட்டது.