districts

img

ராசாத்தி ராயதுரை படம் திறப்பு

கடலூர், ஏப். 16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.ராஜேந்திரன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆர்.ராஜன் ஆகியோரது தாயார் ராசாத்தி ராயதுரை அண்மையில் காலமானார். அவரது படத்திறப்பு நிகழ்ச்சி கூ.குடிகாடிலுள்ள அவரது இல்லத்தில் ஞாயி றன்று (ஏப். 16) நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திட்டக்குடி வட்டச் செய லாளர் வி.அன்பழகன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ராசாத்தி ராய துரையின் படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தி னார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம், என்.எஸ்.அசோகன், முனைவர் சி.நெடுமாறன்துரை. செல்வ ராஜ், பி.சங்கர், கே.எஸ்.பாலகிருஷ்ணன், ஆர்.சரவணன், ஜி.வீரமுத்து, ஆர்.கலைச்செல்வன் உள்ளிட்டோர் அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர். வட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.மகாலிங்கம், டி.பன்னீர் செல்வம், டி.வரதன், ஆர். மாணிக்கவேல், சுமதி, பி. முத்துலட்சுமி, பி.அரவிந்த், ஆர். விஸ்வநாதன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.