districts

img

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனத்தின் ஈவு இரக்கமற்ற நிலையில் போர் தொடுத்து வரும் இஸ்ரேலை கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் சிதம்பரம் லப்பைத் தெரு பள்ளிவாசல் தலைவர் முகமதுஹலீம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயலாளர் ஜாகிர் உசேன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில துணைத் தலைவர் மூசா, ஐக்கிய ஜமாத் தலைவர் செல்லப்பா, தமுமுக மாவட்டத் தலைவர் அஸ்லம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில செயலாளர் வாஞ்சிநாதன், சிபிஎம் நகர செயலாளர் ராஜா, மாவட்ட குழு உறுப்பினர் ஜெயசித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.