districts

img

வனப்பகுதி மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை விவசாயிகள் சங்கம் போராடும் பெ.சண்முகம்

கிருஷ்ணகிரி,அக்.11- புதிய வன திருத்த சட்டத்தை கைவிட வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் அஞ் செட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சங்கத்தின் மாநிலத்தலைவர் பெ.சண்முகம் வனப்பகுதி மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை விவசாயிகள் சங்கம் போராடும் என்றார். அவர் மேலும் பேசுகை யில், வனம் உருவான காலம் முதலே விலங்குகள் மட்டு மல்ல மனிதர்களும் அங்கு வசித்து வந்தனர். இது தான் இயற்கை.இங்கு வன  விலங்குகளால் விவசாயி கள், விவசாயம், மக்கள் பாதி க்கப்படுவதும் இயற்கை யானதே, வெள்ளம், மழை, புயல், காற்று,வறட்சி போல விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளையும் இயற்கை பேரிடராக கருதி இழப்பீடு, காப்பீடு, நிவாரணம் வழங்கு வது சரியான நியதியாகும். மாறாக விலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புகள், உடல் உறுப்பு பாதிப்பு, விவசாய பாதிப்புகளுக்கு கூட இழப்பீடு வழங்க மறுத்து வருவது இயற்கை நியதிக்கு புறம்பானதாகும்.  மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையில் கலவரத்தை ஏற்படுத்தி மோத விட்டு திசை திருப்பி கார்ப்பரேட்டுகளுக்கு மணி ப்பூர் மலைகளை விற்கத் துடிக்கிறது ஒன்றிய பாஜக அரசு. காரணம் இந்த மலை ப்பகுதிகளில் பேட்டரிகள் தயாரிக்க பயன்படும் “லித்தியம்” அதிகமாக கிடைப்பதாக கனிம வளம் குறித்த ஆய்வுகள் கூறி யுள்ளன. இதை கொள்ளை யடித்து லாபம் பெற்றிட மலைகளை தகர்த்திட துடிக்கும் கார்ப்ப ரேட்டுகளின் கைக்கூலியாக  செயல்படும் மோடி அரசின்  இத்திட்டங்களின் தொடர்ச் சியே காவேரி தெற்கு 17 வது வனவிலங்கு சரணால யம். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள வீடில்லாத மக்க ளுக்கு வன மலை பகுதி களில் 2 சென்ட் வீட்டு நிலம் கொடுக்க மறுப்பதுடன் அப்பகுதிகளில் சிறிய குடிசை போட்டு வாழும் மலைவாழ் மக்களையே துரத்தி அடிக்கும் மோடி அரசு மணிப்பூர் போல , அதானிகளுக்கும் அம்பானி களுக்கும் மலைகளை, வனங்களை முழுமையாக கொடுக்கவே 2023 புதிய வன உரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. விலங்குகளிடமிருந்து விவசாயத்தை,விவசாயி களை, மக்களை பாது காத்துக்கொள்ள விலங்கு களை விரட்டிட, வராமல் தடுத்திட வெடிகளை பயன்படுத்துவதற்கும்,

விவ சாயம்,விவசாயிகள் விலங்குகளால் பாதிக்கப் பட்டால் இயற்கை பேரிடரின் கீழ் நிவாரணம் இழப்பீடு காப்பீடு வழங்குவதற்கும் கேரள  அரசு சட்டம் இயற்றி யுள்ளது.அதுபோல இங்கும் சட்டம் இயற்ற வேண்டும்.  மலைகளையும் வனங்க ளையும் அங்குள்ள மக்க ளையும், விவசாயத்தையும் அழிக்க துடிக்கும் அரசு அலு வலர்களுக்கும், அரசுக்கும் சமீபமாக நீதிமன்றத்தால் வாச்சாத்தி வழக்கில் தண்டிக்கப்பட்ட அரசு அலு வலர்கள் கதிதான் கிடைக் கும், தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் வாச்சாத்தி மக்களுக்கு நீதி கிடைத்திட போராடியது போல் அஞ்செட்டியில் மட்டுமல்ல மலை, வனப்பகுதி மக்க ளுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.  ஆடு மாடு மேய்ப்பவர்களிடமும் சிறு மகசூல் செய்பவர்களிடமும், சட்டவிரோதமாக லஞ்சம் கேட்பது,ஒரு ஆட்டுக்கு ரூ.500 1000 என லஞ்சம் கேட்பது, பொய் கூறி தண்டவரி என்ற பெயரில் அதிக மாக வசூலிப்பது, தண்டிப்பது,பொய் வழக்குகள் போடு வது, வீடுகளை சூறை யாடுவது இனியும் தொடரு மானால் விவசாயிகள் சங்கம் சார்பில் அவர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்  என்றார் சண்முகம். கோரிக்கைகள் காவிரி தெற்கு சரணா லயம் எனும் பெயரில் தேன்கனிக்கோட்டை, அஞ் செட்டி, பென்னாகரம், பாலக் கோடு, வட்டங்களின் மலை வாழ் பழங்குடி,மற்றும் பல தலைமுறைகளாக இப்பகுதி யில் வசிக்கும், விவசாயம் செய்து வரும் விவசாயிகள்,  கிராமங்களை வெளி யேற்ற துடிக்கும் ஒன்றிய அரசையும், வன அலுவல ர்களையும் கண்டித்தும் விவசாயிகளை விவசா யத்தை வசிப்பிடங்களை பாதுகாத்திட கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட செயலா ளர் சி.பிரகாஷ் தலை மையில் மாவட்ட தலைவர் முருகேசன், பொருளா ளர் எம்எம்.ராஜு,முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஆர்.சேகர், இருதய ராஜ்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சாம்ராஜ், சி.பி.ஜெயராமன் அஞ் செட்டி வட்ட செயலாளர் தேவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.