districts

img

போக்குவரத்து பணியாளர்கள் ஓய்வு அறை திறப்பு

அம்பத்தூர், ஜன. 2- ஆவடி மாநகரப் போக்கு வரத்து கழக பணிமனையில் பணியாளர்களுக்கான குளிர்சாதன ஓய்வு அறையை சட்டமன்ற உறுப் பினர் சா.மு.நாசர் செவ்வா யன்று (ஜன. 2) திறந்து வைத் தார். ஆவடி மாநகரப் போக்கு வரத்து கழக பணிமனையில் பணியாளர்களுக்கு குளிர் சாதன ஓய்வு அறை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு ஆவடி சட்டப்பேரவை உறுப்பினர் சா.மு.நாசர் தலைமை வகித்து, ஓய்வு  அறையை திறந்து வைத்தார்.  தொடர்ந்து, அவர் மழை யால் சேதமடைந்த பணி மனை வளாகத்தை பார்வை யிட்டு விரைந்து சீர மைக்க  உரிய நடவடிக்கை  எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் ஆவடி, கோவில் பதாகை பகுதியில் உள்ள டிரினிட்டி அவென்யூ, மங்களம் நகர், எம்சிபி நகர்,  கிருஷ்ணா அவென்யூ ஆகிய பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கோயில்பதாகை பிரதான சாலை, மங்களம் நகர் பகுதி யில் மாநகரப் பேருந்து நிறுத்தத்தை நாசர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இதில் ஆவடி மாந கராட்சி மேயர் கு.உதய குமார், மண்டலக் குழுத் தலைவர் என்.ஜோதிலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.