திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளியன்று (பிப் 28), மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.இராஜேந்திரன் நிதியிலிருந்து வழங்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கல்வி உபகரணங்களை திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் 10,11,12ம் வகுப்புகளை சேர்ந்த 9122 மாணவ, மாணவியர்களுக்கு வழங்கும் பொருட்டு அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் பொருட்களை வழங்கினார்.