மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டனின் சகோதரர் மனைவி அமராவதி சனிக்கிழமையன்று (ஏப். 8) குருபரப்பள்ளி அருகிலுள்ள குந்தபள்ளியில் காலமானார். அவரது உடலுக்கு மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ஜெயராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், இருதயராஜ், மகாலிங்கம், பிரகாஷ், சுரேஷ், மாவட்ட குழு உறுப்பினர்கள் லெனின்முருகன், இளவரசன், வட்டச் செயலாளர் ராஜா, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பெரியசாமி, மாணவர் சங்க நிர்வாகி கோபி, மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் சரஸ்வதி, தர்மபுரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.