districts

img

சத்துணவு ஊழியர்கள் உண்ணாநிலைபோராட்டம்

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி விழுப்புரத்தில் சத்துணவு ஊழியர்கள் செவ்வாயன்று உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டதலைவர் டி.ஜெயந்தி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜானகிதேவி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சரவணன், செயலாளர் வீமன்ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.  வேளாண் அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத்தலைவர் ஏ.ஜே.பார்த்திபன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெ.ஜெய்சங்கர், அரசு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்கம் மாநில செயலாளர் ஆர்.சிவக்குமார், பேரூராட்சி அலுவலர் சங்கம் மாவட்ட செயலாளர் ஆர்.சுதாகர், நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்ட தலைவர் எம்.மகேஸ்வரன், மத்திய மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் எம்.மேகநாதன், சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியதாரர் சங்கம் மாவட்ட தலைவர் ஏ.அண்ணாமலை கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மூர்த்தி நிறைவுசெய்து பேசினர்.