districts

img

என்யுஎல்எம் தொழிலாளர்களுக்கும் முன்பணம், போனஸ் வழங்க வேண்டும்

சென்னை, அக். 29 - என்யுஎல்எம் தொழி லாளர்களுக்கு தீபாவளி முன்பணம், பொங்கல் போனஸ் வழங்க வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் செவ்வாயன்று (அக்.29) ரிப்பன் மாளிகை யில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நேரமில்லா நேரத்தில் 41வது வார்டு உறுப்பினர் பா.விமலா பேசியது வருமாறு: சென்னையில் மழை வெள்ளம் வழக்கமாக டிசம் பரில் வரும். ஆனால் அக்டோபர் மாதமே கன மழை பெய்தது. மாநகராட்சி  மேற்கொண்ட முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளால் பெருமளவு சேதாரங்கள் தவிர்க்கப்பட்டு இருக்கி றது. இதற்காக பாடுபட்ட மேயர் முதல் தூய்மை பணி யாளர்கள் வரை அனை வருக்கும் பாராட்டுக்கள். எழில் நகரில் பம்பிங் ஸ்டேஷன் 41வது வட்டத்தில் மழைக் காலங்களில் எழில் நகர் போன்ற தாழ்வான பகுதிகளில் கழிவுநீர் தேங்கி வெளியேறாமல் உள்ளது. இப்பகுதியில் பம்பிங் ஸ்டேஷன் அமைக் கப்பட்டால் சாலையில் கழிவுநீர் தேங்குவது தடுக்க இயலும். இதனை பலமுறை அறிவுறுத்தியும்  நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே மாநக ராட்சி உடனடியாக குடிநீர்  மற்றும் கழிவுநீர் வாரியத் திற்கு உத்தரவிட்டு பம்ப்பிங் ஸ்டேஷன் அமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். முன்பணம், போனஸ் மாநகராட்சி நிரந்தர பணி யாளர்களுக்கு வழங்கப்படு கின்ற தீபாவளி முன்பணம் மற்றும் பொங்கல் போனஸ் ஆகியவற்றை என்யுஎல்எம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இந்த தொழிலாளர் களுக்கும் தீபாவளி முன் பணம் மற்றும் பொங்கல் போனசாக ரூ.3ஆயிரம்  வழங்க வேண்டும். தனியார் மயமாக்கப்பட்டுள்ள மண்ட லங்களில் உள்ள  தூய்மை பணியாளர்களுக்கும் இதே போன்று முன்பணம், பொங்கல் போனஸ் வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் 13ஆயிரம் குடும்பங்கள் பயனடையும். வி ஸ்டார்ட் நிறுவனம் கொடுங்கையூர் மற்றும்  பெருங்குடி கிடங்குகளில், குப்பையில் இருந்து தோட் டப்பொருள் தயாரிக்கும் பணியை வி ஸ்டார்ட் கம்யூனிகேஷன் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து செய்து  வருகிறது. இந்நிறுவனத் தில் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி  புரிகின்றனர். ஊழியர்க ளுக்கு நிறுவனம் முறை யாக சம்பளம் வழங்குவ தில்லை. 15 மாதங்களாக பிடித்தம் செய்யப்பட்ட பிஎப் பணத்தை செலுத்தாமல் முறைகேடு செய்துள்ளனர். இது பொருளாதார குற்ற மாகும். இதில் மாநகராட்சி உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொழி லாளர்களுக்கு நிர்வாகம் போனஸ் வழங்காமல் உள்ளது. எனவே, மாநக ராட்சி நிர்வாகம் தலையிட்டு பிரச்சனையை தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசி னார்.