வேலூர், அக் 10 - வேலூர் மாவட்டம், காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் மாணவர் மன்ற துவக்க விழா வேந்தர் கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், பதிவாளர் டி.ஜெயபாரதி, மாணவர் நலன் இயக்குநர் நைஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவை துவக்கி வைத்து வடக்கு மண்டல காவல்துறை ஐ.ஜி ஆஸ்ராகார்க் பேசுகையில், மாணவர் மன்றம் என்பதும் ஜனநாயகம் போன்றது தான் இந்த மாணவர் மன்றத்தில் நீங்கள் பங்கு பெற்று பணியாற்றுவது உங்களில் எதிர்கால துறைக்கு பயனுள்ளதாக அமையும். மேலும் இதன் மூலம் நீங்கள் தலைமை பண்பை வளர்த்துக் கொள்ள முடியும் என்றார். தலைமை பண்பு என்பது ஒரு துறை சார்ந்தது அல்ல, அது சிறிய நிறுவனம் முதல் அனைத்து பெரிய நிறுவனங்களிலும் தலைமை பண்பு உள்ளவர்கள் பங்கு என்பது இன்றியமையாததாக உள்ளது ஆகவே நீங்கள் தலைமைப் பண்பை உணர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.அப்போது தான் பல பிரச்சனை களை கடந்து வர முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.