districts

img

‘எனது வார்டில் ஒரு பணியும் நடக்கவில்லை’ சிதம்பரம் நகரமன்ற துணைத் தலைவர் குற்றச்சாட்டு!

சிதம்பரம், மே 18-

    சிதம்பரம் நகராட்சியில் உள்ள 33 ஆவது வார்டில் எந்த பணியும் நடக்கவில்லை என்று துணைத் தலைவர் குற்றம் சாட்டினார். சிதம்பரம் கூட்டம் மன்றக்கூட்டம் தலைவர் செந்தில்குமார் தலைமை தலை மையில் நடைபெற்றது.

   பொறி யாளர் மகாராஜன், நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

   நகர் மன்ற உறுப்பினர் விஜய ராகவன் (திமுக) பேசுகை யில்,“நகரத்தின் பல்வேறு பகுதி களில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தெருக்களில் வழிந்து ஓடுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை” என்றார்.

  வெங்கடேசன் (திமுக ) 4-ஆவது வார்டில் பெரியண்ணா குளம் மற்றும் நடராஜா கார்டன் அமைப்பதற்கு நன்றி தெரிவித்தார். புகழேந்தி (திமுக) ,“சுமார் 40 நாட்களாக சுப்பிரமணியன் தெருவில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக அதனை உடனடியாகத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். நகர்மன்ற துணைத் தலை வர் முத்துக்குமரன் (சிபிஎம்), “கோடிக்கணக்கான ரூபாயில் திட்டப்பணிகள் நடந்தாலும், எனது 33-ஆவது வார்டில் இது வரை எந்த பணியும் நடை பெறவில்லை” என்றார்.

   பிறகு, பதிலளித்து பேசிய நகர் மன்றத் தலைவர் செந்தில்குமார்,“ உறுப்பினர்கள் தெரிவித்த புகார் மற்றும் கோரிக்கைகள் குறித்து அதி காரிகளுடன் பேசி உரிய நட வடிக்கை எடுக்கப்படும்” என்றார்.