சென்னை, ஜூன் 20-
புதிய கல்விக் கொள்கையை எந்த வடிவத்திலும் அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்ட மைப்பு வலியுறுத்தியுள்ளது.
கூட்டமைப்பின் மாநில ஒருங்கி ணைப்பாளர் கு.தியாகராஜன் தலைமை யில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இதில் ஒருங்கிணைப்பாளர்கள் இளம்பரிதி, நேரு, ஜோஸ்வா வளவன், இளங்கோவன், சண்முகநாதன், தியோடர் ராபின்சன், சரவணன், ராமு , செல்வகுமார், பெரிய துரை மாதவன், ஜோசப் சேவியர், ஜான்வெஸ்லி, சபரி, பாபு, முருகதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்
கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து பணம் பெறும் நடை முறையை அமல்படுத்த வேண்டும். உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பழைய முறைப்படி வழங்க வேண்டும்.
தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு உள்ளிட்ட பதவி உயர்வுகளுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பிற்கு தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை மேல்முறையீடு செய்ய வேண்டும். பணியில் இருப்பவர்கள் பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை திரும்பப்பெறும் வகையில் பள்ளிக்கல்வித்துறை கொள்கை முடிவு எடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து பதவி உயர்வுகளையும் வழங்க வேண்டும்.
பெற்றோர் ஆசிரியர் கழகம் - பள்ளி நிர்வாகம் மூலம் பணிபுரியும் 171 தொழிற்கல்வி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும. உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், கணினி அறிவியல், போன்ற பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை மாணவர் நலன் கருதி முழு நேர ஆசிரியர்க ளாக மாற்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு ஊழியர் ஆசிரியர்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசி ரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்.
புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் எந்த வடிவிலும் அனு மதிக்காமல் தடுக்க வேண்டும்
ஒன்றிய அரசு நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.