அரசு போக்குவரத்து கழக வேலூர் மண்டல சிஐடியு பொதுச் செயலாளர் ஆற்காடு கே. ரவிச்சந்திரன் - அ. மாலா இல்ல திருமணம் திங்களன்று (ஜூன்18) தர்மபுரியில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அரசு போக்குவரத்து சம்மேளனம் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் பங்கேற்றார். அவரிடம் நிர்மல் பள்ளி நிதி ரூ. 3ஆயிரம், தீக்கதிர் வளர்ச்சி நிதி ரூ. 2ஆயிரத்தை மணமக்கள் வழங்கினர்.உடன் அரசு போக்குவரத்து கழக சம்மேளனம் துணை பொதுச்செயலாளர் தயானந்தம், மாநகர போக்குவரத்து தலைவர் துரை, சேலம் மண்டல பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.