கடலூர், நவ.14- தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கடலூர் எம்எல்ஏ ஐயப்பன் அறி வுறுத்தியுள்ளார். கடலூர் தென்பெண்ணையாற்றில் கரை யோரம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீர் மற்றும் கரையின் பாதுகாப்பு குறித்தும் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் ஆய்வு மேற்கொண்டார். நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை, கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரி நீர் வினாடிக்கு 2000 கன அடி திறந்து விடப்பட்டதால் தற்போது தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் அதி கரித்துள்ளது. இதனால், மாவட்ட ஆட்சியர் அலு வலகம் எதிரே உள்ள தரைப்பாலம் மூழ்கடித்து தண்ணீர் ஓடுவதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கையும் செய்தி ருக்கிறது. மேலும், பாதுகாப்பான இடங்களில் தங்கும் அறிவுறுத்தியுள்ளது. அந்த பகுதியில் படகுகளுடன் 10 பேர் கொண்ட மீட்பு குழுவில் அங்கு தயார் நிலை யில் உள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் கோ. அய்யப்பன், பொதுமக்களை சந்தித்தார். அப்போது, நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் தங்கள் பகுதிகளில் தண்ணீர் சூழக் கூடிய நிலை ஏற்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களிலும், அரசு கட்டிடங்களில் தங்கி கொள்ள வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் வெளியில் சுற்றுவதை தவிர்த்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின் போது கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், மாநக ராட்சி கவுன்சிலர் சுமதி ரங்கநாதன், குமாஸ்தா சங்கத் தலைவர் தாமோதரன், ஒப்பந்ததாரர் ராஜசேகர் உட்பட பலர் உடனிருந்தனர்.